“இதயம் மறப்பதில்லை இயற்கை மறந்தாலும் இறைவன் மறந்தாலும் - உன்னை இதயம் மறப்பதில்லை உதயம் என்றால் அதில் உன் முகம் பார்ப்பேன் உண்ணும் பொருளிலும் உன் குணம் காண்பேன் மதியத்துக் கோடையிலும் உன் நிழல் கேட்பேன் மரணத்தில் உன் மடியில் என் தலை சாய்ப்பேன் மறுபிறப் பென்றிருந்தால் மண்ணிடைப் பிறப்பேன் வயது வளரும் வரை மனதில் வைத்திருப்பேன் இருபதில் உன்னுடனே இரண்டறக் கலப்பேன் இதிலுமோர் தோல்வியென்றால் என் கதை முடிப்பேன்” Poems Of Love Author:Kannadasan